![]()
புதிய கண்டுபிடிப்பான ஆறாவது அறிவு கருவி அனைவரும் காணவேண்டிய காணொளி.
பிரணவ் மிஸ்ட்ரியின் கண்டுபிடிப்பான ஆறாவது அறிவு கருவியை பற்றி ஒரு ஆழமான பார்வை.
இவருடைய கண்டுபிடிப்பின் மூலம் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களை தகவல் தொழில்நுட்ப சாதனங்களுடன் பயன்படுத்த இயலும். உதாரணமாக காகிதத்தையே மடிக்கணினியாக பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் காமெராவை வெளியே எடுக்காமல் நமது கைகளை கொண்டே படம் எடுத்து, படங்களை டிஜிட்டல் காமெராவில் சேமிக்கலாம். மேலும் இது தொடர்பான பல கண்டுபிடிப்புகளை இந்த காணொளியில் அவர் விளக்கியுள்ளார்.
ஆறாவது அறிவு கருவி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்களை open source முறையில் வெளியிடப் போவதாக பிரணவ் மிஸ்ட்ரி கூறினார். இந்த தகவல்களை பலரும் படித்து, இதனை அடிப்படையாக கொண்டு பலரும் தங்கள் சிந்தனைகளை செயல் வடிவமாக மாற்ற முடியும். பிரணவ் மிஸ்ட்ரிக்கு வாழ்த்துக்கள். இவர் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது




Kommentarer
மிகவும் நல்ல விடயம் ஒன்றை பேர்கன் தமிழ் வெப் மூலம் மக்களுக்கு சென்றடைய செய்துள்ளீர் . பாராட்டக்கூடிய விடயம். இதுபோன்ற நல்ல விடயங்கள் பலவற்றை தொடர்ந்தும் செய்வீர்கள் என்று நம்புகின்றோம். வாழ்த்துக்கள்.
இப்படிக்கு சந்துரு
RSS feed for kommentarer til dette innlegget.